டோர்னியர் விமான விபத்தில் 3 விமானிகளும் இறந்தது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி
சென்னை: டோர்னியர் விமான விபத்தில் 3 விமானிகளும் உயிரிழந்தது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் ரக சிறிய விமானம், கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றது. அப்போது அந்த விமானத்தில், சுபாஷ் சுரேஷ், எம்.கே.டோனி ஆகிய விமானிகளும், துணை கமாண்டர் வித்யாசாகரும் இருந்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானம் இரவு சுமார் 9.30 மணியளவில் திடீரென மாயமானது.
அதனைத் தொடர்ந்து மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணியில் தமிழக மற்றும் இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 10ம் தேதி பாண்டிச்சேரி அருகே கடலில் டோர்னியர் விமானத்தின் பாகங்கள் கிடைத்தது. விமானப் பாகங்கள் கிடைத்த பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில், ஜூலை 11ம் தேதி 3 உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
அந்த உடல் பகுதிகள் டி.என்.ஏ. ஆய்வுக்காக அனுப்பப் பட்டது. தற்போது அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மீட்கப்பட்ட 3 உடல் பகுதிகளில் டோர்னியர் விமானத்தில் பயணம் செய்த விமானிகளுடையது தான் என்பது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக கடலோர காவல்படை ஐ.ஜி. எஸ்.பி.சர்மா கூறுகையில், ''கடலில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் டிஎன்ஏ சோதனையில், டோர்னியர் விமான விபத்தில் 3 விமானிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 11ஆம் தேதி மாலை சென்னையில் மூன்று விமானிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்படும்'' என்றார்.
மேலும், கருப்பு பெட்டி ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவுகளும் விரைவில் தங்களுக்கு கிடைக்கும் என்றும் சர்மா கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications