20 தமிழர்கள் சுட்டுப்படுகொலை: சிபிஐ விசாரணை கோரி மக்கள் நலன் காக்கும் இயக்கம் உண்ணாவிரதம்
சென்னை: ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திர வனப்பகுதியில் செம்மரங்கள் கடத்தியதாக, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அப்பாவி கூலித் தமிழர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுப் படுகொலை செய்தனர்.
ஆனால், இது என்கவுண்டர் அல்ல திட்டமிடப்பட்ட படுகொலை எனக் கூறப்படுகிறது.

அறப்போராட்டம்...
எனவே, இது தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும், தமிழக அரசு இதில் தலையிட வேண்டும் என வலியுறுத்தியும் அறப்போராட்டம் நடைபெறும் என மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்தது.

உண்ணாவிரதப் போராட்டம்...
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்திற்கு அருகில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மதிமுக, விசிக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை பங்கேற்றன.

சிபிஐ விசாரணை வேண்டும்...
இதில் பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோ, "தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ.விசாரணை வேண்டும் என தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசு பிரச்னையை மூடி மறைத்து தட்டிக்கழிக்க முயற்சிக்கிறது.

மக்களை திரட்டி போராட்டம்...
உரிய நடவடிக்கை எடுக்க ஆந்திர அரசிற்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் . இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்" என்றார்.

குடும்பத்தாரும் பங்கேற்பு...
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட்டு கட்சி தமிழ்மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பெ.மணியரசன், தியாகு, நாகை திருவள்ளுவன், இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோரும், உயிரிழந்த 20 தமிழர்களின் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications