என்ன கொடுமை.. மனைவி கோபித்துக் கொண்டு போனதால் மகள், 2 மகன்களுடன் கணவர் தற்கொலை முயற்சி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மனைவி கோபித்துக் கொண்டு போனதால் மகள், 2 மகன்களுடன் கணவர் தற்கொலை முயற்சி-வீடியோ
கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதியில் மனைவி கோபித்துக் கொண்டு போய் விட்டதால் கணவர் தனது 3 பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பனந்தாள் அருகே பாலாகுடியில் வசிப்பவர் சரவணன் (40). இவரது மனைவி மாலதி. இத்தம்பதிக்கு சரண்யா (3), மாதேஷ் (10), சந்தோஷ் (8) என 3 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்பத் தகராறில் மாலதி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போய் விட்டார். இதனால் வருத்தமடைந்த சரவணன் தனது 3 பிள்ளைகளுடன் வயலுக்கு தெளிக்கும் பருத்தி மருந்தை சோற்றில் கலந்து தற்கொலை முயற்சித்தார்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 4 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கவலறிந்த திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் நேரில் வந்து விசாரணை செய்தார்.












Click it and Unblock the Notifications