வேலைக்குச் சென்றதால் கட்டிய மனைவி எரித்துக் கொலை – 6 வருடம் கழித்து கணவனுக்கு ஆயுள்!
சென்னை: சென்னையில் கட்டிய மனைவியை எரித்துக் கொன்ற இளைஞர் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அருள்மணி.
இவருக்கும், சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
வேலை பார்த்த மனைவி:
திருமணத்துக்கு பின்னர் நந்தினி, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பிடிக்காத கணவர்:
இது அருள்மணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து மனைவி நந்தினியிடம் தகராறு செய்து வந்தார்.
கணவன் -மனைவி தகராறு:
கடந்த 2008 ஆம் ஆண்டு, வழக்கம்போல கணவன்,மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
தீவைத்த கணவர்:
இதில் ஆத்திரம் அடைந்த அருள்மணி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை நந்தினி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
மனைவி பரிதாப பலி:
இதில் படுகாயம் அடைந்த நந்தினியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.
மரண வாக்குமூலம்:
முன்னதாக அவர் போலீசாரிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீசார், அருள்மணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கணவனுக்கு ஆயுள் தண்டனை:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா, நேற்று தீர்ப்பு கூறினார். அதில், கொலையான நந்தினியின் கணவன் அருள்மணிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications