ஆத்திரம் மண்டைக்கேறி ஒரு வினாடி செய்யும் தவறு... ஆயுசுக்கும் நின்றுவிடுகிறது!
மனைவியை ஹெல்மெட்டால் தாக்கி கொன்ற கணவன் போலீசில் சரணடைந்துள்ளார்.
Recommended Video

திருவள்ளூர்: ஆத்திரம் மண்டைக்கேறி அந்த ஒரு வினாடி செய்யும் தவறுதான் ஆயுசுக்கும் நின்றுவிடுகிறது. மனைவி என்றும் பாராமல் பெண் என்றும் பாராமல், கொடூரமாக கொலை செய்துவிட்டு கடைசியில் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார் அவரது கணவன்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையத்தை சேர்ந்தவர் சுதாகர். இவர் விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுதாகர் ஒரு டாஸ்மாக் ஊழியர். கடையில் வெறும் ஊழியராக மட்டும் இருந்திருந்தால் பரவாயில்லையே. ஆனால் சுதாகர் தினந்தோறும் அளவுக்கதிமாக தண்ணி அடித்து வந்திருக்கிறார்.

கோர்ட்டில் விண்ணப்பித்தனர்
அதனால் கல்யாணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆனாலும் கணவன்-மனைவியிடம் ஒற்றுமை இல்லை. குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் பிரச்சனைதான். தகராறுதான். இவர்களுக்கு குழந்தை கிடையாது. அதனால் அதுவும் மோதலாக வெடித்தது. குழந்தை ஏன் பிறக்கவில்லை, அது சம்பந்தமாக எந்தவித மருத்துவ நடவடிக்கையும் இருவரும் எடுக்காமல், விவாகரத்து செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து கோர்ட்டுக்கு சென்று விண்ணப்பித்துவிட்டனர்.

மீண்டும் சண்டை
இவர்களின் தகராறை கண்ட பாதிரிவேடு போலீசாரும், கோர்ட்டில் விவாகரத்து கிடைக்கும்வரை மனைவிக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக தருமாறு சுதாகருக்கு அறிவுரை கூறினர். முதல் 4 மாதம் ஒழுங்காக மனைவிக்கு பணம் கொடுத்தார் சுதாகர். அடுத்த 2 மாதம் தராமல் விட்டுவிட்டார். இதனால் சண்டை மீண்டும் ஆரம்பமானது.

ரத்தம் கொட்டியது
இதில் பொறுமையிழந்த சுதாகர், கோபம் கட்டுக்கடங்காமல் போய், ஆக்சாபிளேடை எடுத்து விமலாவின் கழுத்தை சரமாரியாக அறுத்தார். அப்போதும் வெறி அடங்காமல், அங்கிருந்த ஹெல்மெட்டை எடுத்து தலையில் கன்னாபின்னாவென்று அடித்தார். இதில் விமலாவுக்கு கழுத்திலும், மண்டை பிளந்தும் ரத்தம் கொட்டியது. அந்த ரத்த வெள்ளத்திலேயே அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார் விமலா.
இதனை கண்ட சுதாகர், நேராக காவல்நிலையம் சென்று சரணடைந்துவிட்டார்.

கொலை வரை சென்ற கோபம்
இதனை கண்ட சுதாகர், நேராக காவல்நிலையம் சென்று சரணடைந்துவிட்டார். கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் எளிதாகவே சுதாகருக்கு விவாகரத்து கிடைத்திருக்கும். கோபம் ஒரு கொலை வரை சென்றுவிட்டது. மதுப்பழக்கம் குடும்ப வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டது. இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சுதாகர் திருந்தியே வந்தாலும் என்ன பயன்?
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications