குழந்தைக்கு கழுதை பால் கொடுத்ததால் கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை
குழந்தைக்கு கழுதை பால் கொடுத்ததை கணவர் தட்டி கேட்டதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு: குழந்தைக்கு கழுதை பால் கொடுத்ததை கணவர் தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம், செங்கோடம்பள்ளம், ரூபி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி மகாலட்சுமி (39). இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மகாலட்சுமி வீட்டில் இருந்தார். அப்போது தெருவில் கழுதை பால் விற்றது. கழுதை பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் குரல் வளம் நன்றாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். இதை அறிந்த மகாலட்சுமி, அந்த பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்தார்.

கணவன் கோபம்
இதை கண்ட கிருஷ்ணன், குழந்தைகளுக்கு கழுதை பால் கொடுத்தால் ஏதாவது ஆகிவிடும். அதை ஏன் கொடுக்கிறாய் என்று கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோபமாக மகாலட்சுமியை திட்டினாராம்.

மனமுடைந்த மகாலட்சுமி
இதனால் மனமுடைந்த மகாலட்சுமி, வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார். இதை கண்டதும் பதறிய கிருஷ்ணன் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் கிருஷ்ணன் அந்த அறையின் கதவை உடைத்தார்.

தூக்கிட்டு தற்கொலை
அப்போது மகாலட்சுமி தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார். அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பரிதாபம்
கழுதைப் பால் விவகாரத்தால் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம், அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இப்போது அந்த குழந்தைகள் நிலை என்ன என்று உறவினர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications