கணவருக்குத் தெரியாமல் 2வது திருமணம்: வழக்கு போட்ட கணவர்
கன்னியாகுமரி: தனக்குத் தெரியாமல் தனது மனைவிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துவிட்டதாக நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலை அடுத்த வடக்கு சூரங்குடி வெள்ளாளன் விளையை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 32). இவருக்கும் பேயன்குழியை சேர்ந்த ரதிதேவி (31) என்பவருக்கும் 24.5.2010 அன்று திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சுதர்சன் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், கூறியுள்ளதாவது:
திருமணத்தின்போது எனது பெற்றோர் ரதிதேவிக்கு பத்தரை பவுன் நகை செய்து அணிவித்தனர். திருமணம் முடிந்த அன்றைய தினம் இரவு எனது மனைவி என்னிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது உன்னுடன் குடும்பம் நடத்தமாட்டேன் என்று கூறினார்.
அதன்பிறகு 16.6.2010 அன்று எனது மனைவியின் ஊரில் திருவிழா நடைபெற இருப்பதாக கூறி ரதிதேவியை அவரது சகோதரி லிசி, சகோதரியின் கணவர் சந்திரகுமார் சேர்ந்து அழைத்துச்சென்று விட்டனர். எனது மனைவி அவளது பெற்றோர் வீட்டிற்கு செல்லும்போது எனது பெற்றோர் அணிவித்த பத்தரை பவுன் நகையை அணிந்து சென்றார். சிலநாட்களுக்கு பின்னர் எனது மனைவியை அவளது வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன்.
அப்போது அவள் வரமறுத்ததோடு, சகோதரியுடன் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டினார்.
அதன்பிறகு 7.8.2012 அன்று எனது மனைவியின் சகோதரி லிசி, அவரது கணவர் சந்திரகுமார் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்து ரதிதேவிக்கு நாங்கள் கண்டன் விளையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து வைத்துவிட்டோம் என்று கூறினர்.
மேலும், அவள் தற்போது கர்ப்பமாக இருக்கிறாள் என்று கூறினர். இனிமேல் அவளை குடும்பம் நடத்த அழைத்தால் உன்னை ஆள்வைத்து அடித்துக் கொன்று விடுவோம் என்றும் மிரட்டினர்.
என் மனைவி நீதிமன்றத்தின் மூலம் எந்த வித விவாகரத்தும் பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக 2-ம் திருமணம் செய்துள்ளார். அவளுக்கு திருமணத்தை நடத்தி வைத்த சகோதரி, அவரது கணவர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், எனது பத்தரை பவுன் நகையையும் மீட்டு தரவேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
முதல் திருமணத்தை மறைத்து மனைவிக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications