சந்தேக புயல் வீசினால் குடும்பம் சிதைந்து நாசமாத்தான் போகும்.. இந்த பரிதாபத்தை பாருங்க!
மனைவியை கொலை செய்துவிட்டு 2 குழந்தைகளுடன் போலீசில் கணவன் சரணடைந்துள்ளார்.
தேனி: சந்தேக புயல் சுழட்டியடித்தால் குடும்பம் சிதைந்து நாசமாகத்தான் போகும் என்ற நம் முன்னோர்களின் வாக்கு என்றுமே பலிக்காமல் இருந்ததில்லை.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவமுருகன். அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக உள்ளார். உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். அதனால் புள்ளக்காபட்டி கிராமத்தை சேர்ந்த கல்யாணப்பிரியா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியின் நடத்தை மீது சிவமுருகனுக்கு சந்தேகம் இருந்து கொண்டே வந்தது. அதனால் அடிக்கடி தகராறும் தொடர்ந்து கொண்டே வந்தது.

இதேபோல இன்று காலையும் சந்தேகம் காரணமாக தகராறு ஏற்பட்டு அடிதடியும் நடந்திருக்கிறது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிவமுருகன், மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், தன்னுடைய 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு சிவமுருகன், ஆண்டிப்பட்டி காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.
நடந்ததையெல்லாம் போலீசாரிடம் விளக்கினார். இதையடுத்து இரண்டு குழந்தைகளையும் சிவமுருகனின் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் கல்யாணப்ரியாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இரண்டு குழந்தைகளையும் பெற்ற பின்னர், மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவனின் இந்த வெறிச்செயலினால் மாவட்ட மக்களின்றி தமிழக மக்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். சந்தேகம் என்னும் உயிர்க்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டது கடைசியில் அந்த குழந்தைகள்தான். ஒரு குழந்தைக்கு வயது 2. மற்றொரு குழந்தைக்கு வயது 1. ஒன்றுமே அறியாத அந்த இரு பிஞ்சு பெண் குழந்தைகள் தாய், தகப்பனை எதிர்பார்த்து அழுது கொண்டிருக்கின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications