அரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை.. சொல்கிறார் சிம்பு
அரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை-சிம்பு- வீடியோ
சேலம்: அரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் போராட்டம் தீவிரமானபோது நடிகர் சிம்பு, கர்நாடக மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுங்கள் என்று வித்தியாசமாக வேண்டுகோள் விடுத்தார்.

இது கன்னடர்களை கவர்ந்தது. நடிகர்கள் நடத்திய மவுன போராட்டத்தையும் சிம்பு புறக்கணித்தார்.
இந்நிலையில் சேலத்தில் தூர்வாரப்பட்ட ஏரியை நடிகர் சிம்பு இன்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை என்றார்.
நீர் நிலைகள், காடுகள் மற்றும் மலைகள் பாதுகாப்பு குறித்து விரைவில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன் என்றும் நடிகர் சிம்பு கூறினார்.












Click it and Unblock the Notifications