கர்நாடகாவில் இருந்து தண்ணீர் மட்டுமல்ல, ரத்தத்தை கூட பெற்றுத் தருவேன்: கமல்ஹாசன்
Recommended Video
மதுரை: கர்நாடகாவில் இருந்து தண்ணீரை மட்டுமல்ல ரத்தத்தை கூட பெற்றுத்தர என்னால் முடியும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
கட்சி துவக்க விழாவில் கமல் பேசுகையில், "முறையான பேச்சுவார்த்தை நடத்தினால் நமக்கானதை பேசியே பெற முடியும். கர்நாடகாவில் இருந்து காவிரி தண்ணீரை கேட்டு வாங்க முடியுமா என்று கேட்கிறார்கள். தண்ணீர் இல்லை, அங்கிருந்து ரத்தத்தை கூட நான் வாங்கித்தர முடியும்.
ரத்தம் என்றால் சண்டைக்கு தயாராகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். ரத்த தானத்தை பற்றி கூறுகிறேன். தானமாக கர்நாடகாவில் இருந்து என்னால் ரத்தத்தை கூட வாங்கி தர முடியும்.
தமிழகத்தில் வெள்ளமும், சுனாமியும் தாக்கியபோது எத்தனையோ பேர் பெங்களூரில் இருந்து வந்து ரத்ததானம் செய்துவிட்டு சென்றனர்.
அப்படியானால் மனிதாபிமானம் அங்கே இருக்கிறது என்பதுதானே பொருள்.
தூண்டிவிட்டால் சண்டை போடத்தான் செய்வார்கள். இவ்வாறு கமல் தெரிவித்தார்.