நடிகர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதற்கான எந்த கடிதமும் வரவில்லை - சரத்குமார்
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தனக்கு கடிதம் எதுவும் வரவில்லை. இடைநீக்கம் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே அறிந்தேன் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியது.

இந்நிலையில், இது தொடர்பாக சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், ''இடை நீக்கம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல், கடிதம் இதுவரை எனக்கு கிடைக்கப் பெறவில்லை. முன்னாள் பொதுச் செயலாளர், முன்னாள் பொருளாளர் ஆகிய இருவருக்கும் கூட கடிதம் வரவில்லை.
நடிகர் சங்கத்தில் இருந்து என்னை தற்காலிகமாக நீக்கியது குறித்த தகவல் ஊடகங்களில் அறிவித்துள்ளனர். நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த அதிகாரபூர்வமான கடிதம் வரவில்லை. அப்படி கடிதம் வந்தால் எனது இடை நீக்கத்தை ரத்து செய்யும்படியும், பொதுக்குழுவில் கலந்து கொண்டு என் நிலையை விளக்குவதற்கும் நீதிமன்றத்தை நாடுவேன்'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications