ஜல்லிக்கட்டை நடத்த நான் தயார், பீட்டா ஆதரவாளர்கள் தேச துரோகிகள்: எச்.ராஜா
காரைக்குடி: ஜல்லிக்கட்டை நடத்த நான் தயாராக இருக்கிறேன். அமெரிக்க பெருநிறுவனங்களின் கைக்கூலியான பீட்டா அமைப்பின் ஆதரவாளர்கள் அனைவருமே தேச துரோகிகள் என பாஜக செயல் தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜல்லிக்கட்டு மற்றும் காவிரி பிரச்சனை குறித்து ஸ்டாலின் கூறும் கருத்துகளில் நேர்மை இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்களை திட்டமிட்டு பாலைவனமாக்கியதே திமுக அரசு தான்.

காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தில் திமுக கையெழுத்து போட்டுவிட்டு ஆட்சியில் இல்லாத நேரத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசால் நீதிமன்றத்தை எதிர்த்து செயல்பட முடியாது. ஜல்லிக்கட்டை நடத்த நான் தயாராக இருக்கிறேன். அமெரிக்க பெருநிறுவனங்களின் கைக்கூலியான பீட்டா அமைப்பின் ஆதரவாளர்கள் அனைவருமே தேச துரோகிகள்.
கலாச்சார பண்பாட்டை அழித்து, விவசாயத்திற்கு பதில் பெட்ரோலியம் சார்ந்த முறையாக இந்தியாவை மாற்றுவதே பீட்டாவின் நோக்கம் என்றார்.












Click it and Unblock the Notifications