For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதனா? அமைச்சர் சி.வி சண்முகம் திடுக் பேச்சு: வீடியோ

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஒரு மனிதனாகக் கூட நான் நினைக்கவில்லை என விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

By Suganthi
Google Oneindia Tamil News

விழுப்புரம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதரா? வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு இருப்பார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அமச்சர் சி.வி சண்முகம், விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,'' ஆளுநர் பல்கலை கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமித்ததில் எந்தத் தவறும் இல்லை. ஆளுநர் அவர் சார்பில் ஒருவரை நியமிக்கலாம். அதன்படி அவர் உயர்நீதிமன்ற நீதிபதியை உறுப்பினராக நியமித்துள்ளார்.

 I never think that EVKS Elangovan is an human being said C.V.Shanmugam

அதுகுறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுவதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாது. அவர் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருக்கிறார். அவரை எல்லாம் நான் மனிதனாகக் கூட நினைப்பதில்லை'' என கூறினார்.

மேலும், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் ஆளுநர் துணைவேந்தர்களை நியமித்தது குறித்து அரசை குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு,'' அவர் யாரோ எழுதிக்கொடுப்பதை சொல்லிக்கொண்டுள்ளார். அவருக்கு அரசை குறைகூறிக்கொண்டே இருக்க வேண்டும்'' என காட்டமாக பதில் அளித்தார்.

English summary
I never think that EVKS Elangovan is an human being said C.V.Shanmugam in meeting in Viluppuram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X