For Daily Alerts
Just In
நான் எப்போதும் பிதாமகன்தான்.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
நான் எப்போதும் பிதாமகன்தான் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை: நான் எப்போதும் பிதாமகன்தான் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆர்கே நகர் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 6 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது.
6 சுற்றுகளிலும் டிடிவி தினகரனே முன்னிலை பெற்றுள்ளார். ஆளும் அதிமுகவின் மதுசூதனன் இரண்டாவது இடத்தை வகித்து வருகின்றார்.
இந்நிலையில் டிடிவி தினகரனின் உறவினரான திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வயதில் சிறியவராக இருந்தாலும் ஆர்கே நகரில் சாதித்துக்காட்டிய தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திவாகரன் நான் பிதாமகன்தான் என்றார்.
Comments
rk nagar rk nagar by poll 2017 by election votes counting ஆர்கே நகர் இடைத் தேர்தல் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை ஆர்கே நகர் இடைத் தேர்தல் 2017
English summary
Diwakaran congrats TTV Dinakaran for leading in RK Nagar by poll. Diwakaran says that i will be a god father for ever.
Story first published: Sunday, December 24, 2017, 13:01 [IST]