நான்தான் பேரவையின் செயலாளர்... நாளை கொள்கைகள் வெளியிடப்படும் - தீபா

எம்ஜிஅர், அம்மா, தீபா பேரவையின் செயலாளராக நானே செயல்படுவேன் என ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்ஜிஅர், அம்மா, தீபா பேரவையின் செயலாளராக நானே செயல்படுவேன் என ஜெ. தீபா தெரிவித்துள்ளார். நாளை பேரவையின் கொள்கைகள் வெளியிடப்படும் என்றும் தீபா கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா ஜெயலலிதாவின் பிறந்தநாளான கடந்த 24ஆம் தேதி எம்ஜிஆர், அம்மா, தீபா பேரவையை தொடங்கினார். எம்ஜிஆர் ஜெயலலிதா சேர்ந்திருக்கும் கொடியையும் அவர் வெளியிட்டார்.

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் ஜெ.தீபா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தான் அரசியலுக்கு வரகூடாது என பலர் தடைகளை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

நான்தான் செயலாளர்

நான்தான் செயலாளர்

மேலும் அவர் கூறியதாவது, எம்ஜிஅர், அம்மா, தீபா பேரவையின் செயலாளராக நான் செயல்படுவேன். பேரவையின் நிர்வாகிகள் மற்றும் கொள்கைகள் குறித்து நாளை அறிவிக்கப்படும்.

விரைவில் அரசியல் அறிக்கைகள்

விரைவில் அரசியல் அறிக்கைகள்

உண்மையான அதிமுக தொண்டர்கள் என்னிடம் பேசி வருகின்றனர். விரைவில் என்னிடம் இருந்து அரசியல் அறிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்

மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்

ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படும்.

பல தடைகள் வருகின்றன

பல தடைகள் வருகின்றன

நான் அரசியலில் ஈடுபவதை பலர் தடுக்கின்றனர். தடைகளை தகர்த்து மக்கள் பணியாற்றுவேன். இவ்வாறு தீபா செய்தியாளர்களிடம் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+