கோகுல்ராஜ் கொலை வழக்கு... நாளை மறுநாள் சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரணடைகிறேன்... சொல்வது யுவராஜ்
சென்னை: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் நாளை மறுநாள் சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் சரணடைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ், கவுண்டர் ஜாதி பெண்ணை காதலித்திருக்கிறார். கலப்பு திருமணங்களை கடுமையாக எதிர்த்துக்கும் யுவராஜ் தரப்பு கோகுல்ராஜை கடத்தி சென்று தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளது என்பது போலீஸ் குற்றச்சாட்டு.

இந்த வழக்கில் யுவராஜ் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். ஆனால் வாட்ஸ் அப் மூலமாக தொடர்ந்து ஊடகங்களுக்கு தகவல் அனுப்பி வருகிறார். அண்மையில்கூட ஒரு தொலைக்காட்சிக்கும் யுவராஜ் பேட்டி அளித்திருந்தார்.
இதனிடையே இவ்வழக்கை விசாரித்து வந்த தலித் பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா திடீரென தற்கொலை செய்து கொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தங்களது விருப்பப்படியே செயல்பட வேண்டும் என்று உயரதிகாரிகள் டார்ச்சர் செய்த காரணத்தாலேயே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்போது கோகுல்ராஜ் கொலை வழக்கு, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கும் இரண்டும் சி.பி.ஐ.சி.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழுக்கு பேட்டியளித்துள்ள யுவராஜ், தம்மை ஒழித்துக் கட்டுவதற்காக தனியரசு எம்.எல்.ஏ.வின் நெருக்கடியால்தான் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.
இந்த வழக்கில் உண்மைகளைத் தெரிவிப்பதற்காக நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன் சரணடைய உள்ளேன் என்று யுவராஜ் கூறியுள்ளார்.
யுவராஜ் சரணடைய உள்ளதால் கோகுல்ராஜ் கொலை வழக்கும் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications