For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூண்டிவிட்டதால் துடிக்கிறார் தீபக்.. அசரமாட்டேன் என்கிறார் தீபா

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

அரசியல் உள்நோக்கத்துடன் திடீர் பல்டி அடித்திருக்கும் சகோதரர் தீபக்குடன் இணைந்து செயல்படமாட்டேன் என்றும், சசிசலா குடும்பத்தினருடன் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது என்றும் தீபா தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் இத்தனை காலம் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த தீபக் நேற்று திடீரென ஓ.பன்னீர செல்வத்துக்கும், சகோதரி தீபாவுக்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தார்.

I wont join with my brother Deepak, says Deepa

இதுகுறித்து தீபா கூறியதாவது சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த தீபக்கின் திடீர் மனமாற்றத்துக்கு பின்னால் ஒரு சதியே இருக்கிறது. யாரோ தூண்டுதலின்பேரில் அவர் இதுபோல் செயல்படுகிறார். நான் ஆர்.கே. நகரில் போட்டியிடுவதைத் தடுக்கவே இதுபோன்று அரசியல் உள்நோக்கத்துடன் தீபக் நடந்து கொள்கிறார். மக்கள் விருப்பப்படி அரசியல் பயணத்தை இன்று தொடங்கிவுள்ளேன்.

எனது அத்தையின் போயஸ் தோட்ட இல்லமெல்லாம் எனக்கு வேண்டாம். அவர் பயன்படுத்திய பேனாவை மட்டும் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். சசிகலா, அவரது குடும்பத்தினருடன் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது. எனக்கென்று ஒரு வட்சிய பாதையை வகுத்து கொண்டு கட்சி பணியாற்றுவேன். ஓபிஎஸ் தரப்புடனோ, சசி தரப்புடனோ, தீபக்குடனோ இணைந்து பணியாற்றப் போவதில்லை.

மக்களின் எதிர்ப்புகளை மீறி தமிழகத்தில் நடைபெறும் வரும் ஆட்சி விரைவில் கவிழும். தீயசக்திகளை மக்கள் விரட்டியடிப்பர். என்னை நம்பி எனக்கு ஆதரவளித்த கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் என் உயிருள்ள வரை கடமைப்பட்டுள்ளேன். சுயநலம் கருதாமலும், யாருக்கும் அஞ்சாமலும் மக்கள் பணியாற்றுவேன்.

என்னை நம்பி என் பின்னால் வந்துள்ளோரை கைவிட மாட்டேன். என் அத்தையைப் போன்ற தோற்றத்தில் உள்ள நான் விரைவில் அவரது இடத்தைப் பிடிப்பேன். போயல் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்க மக்கள் விரும்பினால் அவ்வாறு செய்யப்படும் என்றார்.

English summary
It is a big conspiracy behind Deepak's decision, says Deepa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X