ஏ என் 32 விமானத்தைக் காணவில்லை- சேலையூர் போலீஸில் விமானப்படை புகார்
சென்னை: காணாமல் போய் விட்ட ஏ என் 32 ரக விமானத்தைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி சென்னை சேலையூர் காவல் நிலையத்தில், இந்திய விமானப்படை சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விமானம் காணாமல் போய் இன்றுடன் 3 நாட்களாகி விட்டன. விமானத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட கப்பல்கள், விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீவிர தேடுதல் வேட்டை
கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல் படை ஆகியவை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

போலீஸில் புகார்
அதில் 29 பேருடன் ஏஎன் 32 ரக விமானம் தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து கிளம்பிச் சென்றபோது நடு வழியில் காணாமல் போய் விட்டதாக கூறப்பட்டுள்ளது.

சேலையூர் காவல் நிலையத்தில்
இதுகுறித்த புகார் சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன விமானத்தில் இருந்த 29 பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் விமானப்படை புகாரில் கூறப்பட்டுள்ளது.

சட்டரீதியான பார்மாலிட்டி
இந்தப் புகார் சட்ட ரீதியான பார்மாலிட்டிக்காக தரப்படும் புகார் என்று கூறப்படுகிறது. முன்பு கடலோரக் காவல் படையின் சிறிய ரக விமானம் காணாமல் போன சமயத்திலும் கூட இதேன்ற புகார் போலீஸில் தரப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications