நிரந்தரமாக நீக்கினால் மகிழ்ச்சி... தி.மு.க.வுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி...
சென்னை: தி.மு.க.வில் இருந்து நிரந்தமாக நீக்கினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று தற்காலிகமாக நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொிவித்துள்ளாா்.
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோரை இடைநீக்கம் செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இருவரும் இடைநீக்கம் செய்யப்படுவதாக தனது அறிக்கையில் அன்பழகன் குறிப்பிட்டிருந்தாா்.
முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும் திருச்செந்தூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட விரும்பினால், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாகவும் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருந்தாா்.
அதே போல் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன், கருப்பசாமி பாண்டியன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தன்னை நிரந்தரமாக நீக்கினால் தான் மிகவும் மகி்ழச்சியடைவேன் என்று தொிவித்துள்ளாா்.












Click it and Unblock the Notifications