18 எம்எல்ஏக்கள் வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு.. அடுத்து இதுதான் நடக்கும்!
Recommended Video

சென்னை: எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். எனவே அடுத்து வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று மதியம் 1 மணிக்கு ஹைகோர்ட் தீர்ப்பளித்தது..
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகிய நீதிபதிகள் அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.

தலைமை நீதிபதி முதலில்
முதலில் இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பை வாசித்தார். அப்போது, சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பை வாசித்தார். அவர், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தார்.

பல வழக்குகள்
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிவிட்டனர். இதுபோல இதற்கு முன்பு நாட்டின் பல வழக்குகளில் நடந்துள்ளது. அப்போது 3வது நீதிபதியிடம் வழக்கு விசாரணை அனுப்பப்படும். இந்த வழக்கிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. 3வது நீதிபதி விசாரணை நடத்துவார் என்று, ஹைகோர்ட் அறிவித்துள்ளது. 3வது நீதிபதி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தீர்ப்பை மட்டும் ஆராய்வார்
3வது நீதிபதி அமர்வுக்கு வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளாது என தெரிகிறது. இன்றைய தீர்ப்பை 3வது நீதிபதி ஆராய்ந்து தீர்ப்பை வழங்குவதுதான் மரபு. எனவே 3வது நீதிபதி நியமனம் செய்த பிறகு, அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் என தெரிகிறது. அதுவரை 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடரும். அதே நேரம் அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த முடியாது.

எடப்பாடி அரசுக்கு நிம்மதி
3வது நீதிபதி விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும்வரை எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் எடப்பாடி அரசுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications