பாஜக கூட்டணி தொடர்ந்தால் திமுக, அதிமுக ஆட்சியை பிடிக்கவே முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகள் அப்படியே செயல்பட்டிருந்தால், அதிமுக, திமுக ஆட்சி வர முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது அவர்களின் உரிமையாகும். ஆனால் விஜயகாந்தின் முடிவு ஆண்ட கட்சிக்கும் (திமுக), ஆளும் கட்சிக்கும் (அதிமுக) மட்டுமே சாதகமாக அமையும்.
பாஜக, மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்த போது, அதிமுக-திமுக தவிர்த்து, தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்தது.
அதில் பாஜக, தே.மு.தி.க., பா.ம.க., ஐ.ஜே.கே. போன்ற கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். யார் தலைமை.. என்ற எண்ணம் இல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தனர். அதே நிலை இப்போதும் தொடர்ந்தால் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.