பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம்:அமைச்சர் அதிரடி
பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
பச்சைக்கொடி காட்டுவோம்
இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் அதிமுகவினர் பச்சைக்கொடி காட்டுவோம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் காவிரி நீரை பெற பிரதமருக்கு உரிய அழுத்தம் கொடுப்போம் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
திசை திருப்பும் நாடகம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடத்தும் மு.க.ஸ்டாலினின் நடைபயணம் மக்களை திசை திருப்பும் நாடகம் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
மத்திய அரசை பகைத்துக்கொள்வது
நமக்கு தேவை காவிரி மேலாண்மை வாரியம் தான் என்று கூறிய அவர், பிரதமர் உசுப்பேத்துவதும், மத்திய அரசை பகைத்துக்கொள்வதும் நமக்கு தேவையில்லை என்றார்.
காவிரியில் தண்ணீர்
பிரதமரை பகைத்துக்கொண்டு பிரதமரிடம் சண்டை போட்டுவிட்டு யாரிடம் கோரிக்கை அளிப்பது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். காவிரியில் தண்ணீர் பெற வேண்டும் என்பது தான் நமது நோக்கமே தவிர பிரதமரிடம் சண்டைபோடுவதில்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.