சொல்லச் சொல்ல கேட்காமல் கள்ளக்காதல்: அக்காவை கழுத்தை நெறித்துக் கொன்ற தம்பி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் திருமணம் ஆனவருடன் கள்ளக்காதல் வைத்திருந்த அக்காவை தம்பி கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள சேனாபதிபாளையம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம். அவரது மனைவி முத்துலட்சுமி. அவர்களுக்கு நித்யா(23) என்ற மகளும், சந்திரகுமார்(19) என்ற மகனும் உள்ளனர். நித்யா கூலி வேலைக்கு சென்று வந்தார். சந்திரகுமார் பெயிண்டராக உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை இழந்த நித்யா தனது தம்பியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமானவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த சந்திரகுமார் அவர்கள் இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனால் அவர்கள் சந்திரகுமாரின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் அவ்வப்போது சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சந்திரகுமார் வெளியே சென்றிருந்தார். அவர் வர நேரமாகும் என்று நினைத்த நித்யா தனது கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்தார். அந்த நேரம் வீடு திரும்பிய சந்திரகுமார் தனது அக்கா பக்கத்துவீட்டுக்காரருடன் உல்லாசமாக இருப்பதை பார்த்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் அவர் மதியம் வீடு திரும்பியபோது நித்யா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சந்திரகுமார் நித்யாவின் கழுத்தில் கிடந்த துப்பட்டாவை வைத்து அவரது கழுத்தை நெறித்துக் கொன்றார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் சந்திரகுமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+