ஜெயலலிதாவின் 'பிரதமர்' கனவை வெளிப்படுத்தும் அதிமுக தேர்தல் அறிக்கை
சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிக்கை முதல்வர் ஜெயலலிதாவின் பிரதமர் கனவை வெளிப்படுத்தும் வகையில் பல அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் வழக்கம் போல வாக்குறுதிகள் மட்டும் இடம் பெறவில்லை. மாறாக தமிழக அரசின் சாதனைகள் சில பக்கங்கள் பட்டியலிடப்பட்டு அதன் முடிவாக அகில இந்திய அளவில் அதனை நிறைவேற்ற நடைமுறைப்படுத்துவோம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் காங்கிரஸ் அரசு- திமுகவின் தமிழகத்துக்கான துரோகங்கள் என்று பட்டியலிட்டப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக பிரச்சனைகள் சார்ந்த உறுதி மொழிகள் அல்லது வாக்குறுதிகள் தனியே கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னெப்போதும் இல்லாத வகையில் புதியதாக தேசிய அளவிலான வாக்குறுதிகள் என தனியே பிரிக்கப்பட்டு அதில் நாட்டின் முக்கியமான பிரச்சனைகளில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று விவரிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் மட்டும் 22 பிரச்சனைகளை முன்வைத்து அதில் அதிமுகவின் நிலைப்பாடு விவரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார கொள்கை, வெளியுறவுக் கொள்கை, உற்பத்தித் துறை, தொழில்துறை, மாநில அரசுகளுக்கான நிதி ஆதார பெருக்க நடவடிக்கை, சீனாவின் ஆதிக்கம், ஏற்றுமதி இறக்குமதி, வரி விதிப்பு என ஒரு மினி பட்ஜெட் நோட் போல பதிவாகி இருக்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை.
லோக்சபா தேர்தலில் அதிமுக அதிக இடங்களைப் பெற்றால் நாட்டின் பிரதமராக முன்னிறுத்துவோம் என்று ஏற்கெனவே இடதுசாரிகள் கூறி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதாவது ஜெயலலிதாவின் பிரதமர் கனவை வெளிப்படுத்தும் வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது என்றே கூறப்படுகிறது.
அதிமுக தேர்தல் அறிக்கை- முழு விவரம்












Click it and Unblock the Notifications