For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அச்சச்சோ தப்பு பண்ணிட்டோமே.. மனைவியின் கழுத்தை அறுத்த கணவன், தூக்குப்போட்டு தற்கொலை!

கல்பாக்கம் அருகே குடும்பத்தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Google Oneindia Tamil News

கல்பாக்கம்: குடும்பத்தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்பாக்கம் ஆர்எம்ஐ நகரைச் சேர்ந்தவர் வினோத். இவருக்கு மஞ்சுள என்ற மனைவியும் 9 மற்றும் 2 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

In a family problem a husband cuts wife neck and commit siucide

வெளிநாட்டில் வெல்டராக வேலை பார்த்து வந்த வினோத் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை வழக்கம்போல் சண்டை நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வினோத் கத்தியால் மனைவி மஞ்சுளாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அச்சமடைந்த வினோத் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகராறுக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

English summary
In a family problem a husband cuts wife neck near kalpakkam. After this husband commit suicide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X