விவசாயத்தில் நஷ்டம்.. பருத்திக்கு நடுவே கஞ்சா செடி.. விவசாயி கைது.. 3 கிலோ கஞ்சா பறிமுதல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாலபட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெள்ளையன். இவர் தனக்கு சொந்தமான 23 செண்ட் விவசாய நிலத்தில் பருத்தி செடி பயிரிட்டு வந்துள்ளார்.

விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால், தனது தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்க்க திட்டமிட்டார். இதற்காக பிரபல கஞ்சா கடத்தல் கும்பல்களுடன் தொடர் ஏற்படுத்திகொண்ட வெள்ளையன், அவர்களிடமிருந்து கஞ்சா விதைகளை வாங்கி வந்து தனது விலை நிலத்தில், ஏற்கனவே வளர்ந்திருந்த பருத்தி செடிகளுக்கு நடுவில் கஞ்சா விதைகளை தூவி வளர்த்து வந்துள்ளார்.

சுமார் 4 மாதங்களுக்கு மேலாக வெள்ளையன் யாருக்கும் தெரியாமல் கஞ்சா செடி வளர்த்து வந்த நிலையில், இதுபற்றி சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, வெள்ளையனை கைது செய்தனர். மேலும் அவருடைய விளை நிலத்தில் விதைக்கபட்டிருந்த 3 கிலோ கஞ்சா செடிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் வெள்ளையனிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சாவை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதாகவும், கஞ்சாவுக்கான தேவை அதிகமாக இருந்ததால் கஞ்சா செடிகளை பயிரிட்டு, அதன்மூலம் அதிகம் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டதாக தெரிவித்தார். மேலும் வெள்ளையனுக்கு கஞ்சா விதைகளை கொடுத்தவர்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications