குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - அபராத தொகை கிடுகிடு உயர்வு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அபராதத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அபராதத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குடிபோதையில் வாகனம் ஓட்டி 5800 பேர் சிக்கி உள்ளனர். அதிக விபத்து, உயிர் பலிகளுக்கு போதையில் வாகனம் ஓட்டி வந்ததே காரணமாக அமைந்து உள்ளது.

குமரி மாவட்டத்தில் அதிகளவில் விபத்துக்கள் நடந்து வருகின்றன. கடந்த 8 மாதங்களில் 208 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் இளைஞர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இரவு நேர வாகன சோதனையில் குடிபோதையில் அதிகம் பேர் சிக்குகிறார்கள்.
சமீப காலமாக இவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட 8 காவல் நிலையங்களில் இதுவரை 450 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் ஒருபுறம் நடவடிக்கை எடுத்தாலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைய வில்லை. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.
இதில் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட அதிகம் பேர் சிக்கி உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 5,800 பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து சிக்கி உள்ளனர். இதில் 35 ல் இருந்து 40 சதவீதம் பேர் போதையில் பைக் ஓட்டி வந்தவர்கள் ஆவர்.
கார்களில் குடிபோதையில் வந்த பெண்கள் கூட பிடிபட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர்களிடம் இருந்து சுமார் ரூ.57 லட்சம் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications