For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தனியார் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்- ஜெ.க்கு ஆதரவாக உண்ணாவிரதம்!

By Mathi
Google Oneindia Tamil News

In Show of Support. TN Private buses go to Strike for Jayalalithaa
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை தனியார் பேருந்துகள் ஓடாது என்று பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தனியார் அமைப்புகள், பொதுநல சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களின் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து தமிழகம் முழுவதும் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது. மேலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் நடைபெறும்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பேருந்துகள் ஓடாது. தமிழகத்தில் 6 ஆயிரம் தனியார் பேருந்துகள் உள்ளன. 2 ஆயிரம் பேருந்து ஆபரேட்டர்கள் இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு தங்கராஜ் கூறியுள்ளார்.

English summary
The Tamil Nadu Private Bus owners go to 12 hour strike on tomorrow to express solidarity with J Jayalalithaa, the chief of ruling party AIADMK and former state Chief Minister who was convicted in a corruption case by a court in Bangalore on Saturday and sentenced to four years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X