வங்கக் கடலில் உருவாகும் மோரா புயல் நாளை கரையைக் கடக்கும் - வானிலை மையம்: வீடியோ
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மோரா புயலாக உருவாகியுள்ளது. இது நாளை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அதனால் புயல் உருவாகும். அந்தப் புயலுக்கு 'மோரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மோரா புயல் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலேயே கடும் வெயில் மக்களை வதைக்க ஆரம்பித்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டது.
இந்த கடும் கோடையில் கடந்த சில நாட்களாக தமிழக உள்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை நாளை கேரளாவில் தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு 'மோரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
அதையடுத்து கடலூர், நாகை, எண்ணூர், நாகை மற்றும் புதுவையில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.