மின்மிகை மாநிலத்தில் மின்வெட்டா? சமாளிக்க முடியுமா.. அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
மின்வெட்டுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறதா என்றும், அப்படியென்றால், அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி வேண்டுமென்றே பயன்படுத்தப்படுவதில்லை என்று தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது நீதிபதி தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

அப்போது நீதிபதி, "காற்றாலை மின்சாரத்தை ஏன் முழுமையாக பயன்படுத்துவதில்லை? மின் மிகை மாநிலமான தமிழகத்தில் மின்வெட்டு நிலவுகிறதா? அப்படி மின்பற்றாக்குறை இருந்தால் அதனை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
தொழில் நிறுவனங்கள் பெருகிவருகிறது. எதிர்காலத்தில் இதற்கான மின்தேவையை நாம் சமாளிக்க முடியுமா? அறிவிக்கப்படாத மின்வெட்டால் குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதுபோன்ற மின்வெட்டு நேரத்தில் காற்றாலை மின்சாரத்தை ஏன் முழுமையாக பயன்படுத்தக்கூடாது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.
பின்னர் இது தொடர்பாக தமிழ்நாடு மின்பகிர்மான கழகத் தலைவர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்தார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications