Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரி வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெ- சசி இன்றும் ஆஜராகவில்லை; ஜூலை 24க்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி செலுத்தாத வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் இன்றும் ஆஜராகவில்லை. ஜெயலலிதா சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டதால் வழக்கின் விசாரணை ஜூலை 24ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 1991 - 92 மற்றும் 1992 - 93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குகளுக்கு எதிராக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீடுகள் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குற்றம் என்று கூறி, இந்த வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி தீர்ப்பை வழங்க கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஏப்ரல் 3-ம் தேதி ஆஜராக, சென்னை - எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை. பலமுறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.

ஜூன் 3ல் விசாரணை

ஜூன் 3ல் விசாரணை

வழக்கு மே 19ல் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை தள்ளிவைத்த மாஜிஸ்திரேட் இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆஜராகும் தேதி ஜூன் 3ம் தேதி முடிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டார். அதன் பின்னர் ஜூன் 3ம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஜூன் 30க்கு ஒத்திவைப்பு

ஜூன் 30க்கு ஒத்திவைப்பு

ஆனால் அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு ஜூன் 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது அப்போது ஜெயலலிதா, சசிகலா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.

இன்றும் ஆஜராகவில்லை

இன்றும் ஆஜராகவில்லை

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதேசமயம் ஜெயலலிதா சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 24க்கு ஒத்திவைப்பு

ஜூலை 24க்கு ஒத்திவைப்பு

அதில் வருமான வரித்துறையிடம் அபராதத்துடன் வருமான வரி கட்டுவதாக மனு அளித்தோம். அது இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே இவ்வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவரது மனுவை ஏற்ற நீதிமன்றம் வரும் 24ந் தேதிக்கு இவ்வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+