பயணிகளுக்கு ஷாக்.. சென்னையில் விமான டிக்கெட் அதிகரிக்க போகுது?.. காரணமே வேறயாம்!
சென்னை: சென்னை விமான நிலையத்தை பொறுத்தவரை விமான பயணிகள் ஒவ்வொருவரிடம் இருந்தும் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.205-ம், சர்வதேச பயணிகளுக்கு ரூ.300 ம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் என தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் சர்வதேச விமான நிலையங்களில் அந்தந்த விமான நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு ஏற்ப மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை அமலில் இருக்கிறது. இது ஒவ்வொரு விமான நிலையத்தில் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை டெல்லி, ஐதாரபாத், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் இந்த மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தை பொறுத்தவரை விமான பயணிகள் ஒவ்வொருவரிடம் இருந்தும் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.205-ம், சர்வதேச பயணிகளுக்கு ரூ.300 ம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது உள்நாட்டு பயணிகளுக்கு வசூலிக்கப்பட்டு வந்த மேம்பாட்டு கட்டணம் 90 அதிகரித்து தற்போது 295 ஆகவும், சர்வதேச பயணிகளுக்கு ரூ.450ம் வசூலிக்க வேண்டும் என மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் பயணிகளிடம் தனியாக வசூல் செய்யப்படாது. இந்த கட்டணத்தை பொறுத்தவரை விமான கட்டணத்துடன் இணைந்து இந்த கட்டணம் வசூலிக்கப்படும். விமான நிறுவனங்கள் இந்த கட்டணத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்து விடும். பயணிகள் புறப்படும் விமான நிலையத்தில் தான் இந்த கட்டணம் வசூலிக்கப்படுமே தவிர இறங்கும் இடத்தில் வசூலிக்கப்படாது.
தனியாக கட்டணம் வசூலிக்கப்படதால் பயணிகள் பலரும் இதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. மறைமுக கட்டணமாக இது வசூலிக்கப்படுவதால் தற்போது விமான கட்டணங்கள் வழக்கத்தை சற்று அதிகரிக்க போகிறது. உயர்த்தப்பட்ட விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தின் படி உள்நாட்டு பயணிகளிடம் ரூ.90ம், சர்வதேச பயணிகளிடம் 150 உயர்த்தப்பட்டு இருக்கிறது.
-
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications