சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 85.74.. விரைவில் சதம்.. பேரதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை விரைவில் செஞ்சுரி அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஐந்து மாநில தேர்தல்களில் எதிரொலிக்குமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
[இன்று அதிகாலை அந்தமானில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி!]
குறைத்தனர்
கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் ரூபாய்ப் 2.50 பெட்ரோல், டீசல் விலையில் குறைக்கப்பட்டது.
ஏமாற்றுவேலை
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மத்திய அரசு குறைத்த போது இருந்த விலையை மீண்டு எட்டிவிடும். இதற்கு பெட்ரோல் விலையை குறைக்காமலே இருந்திருக்கலாம் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏன் குறைப்பது போல குறைத்துவிட்டு இப்படி ஏற்றுகிறார்கள் என்றுள்ளனர்.
இன்றும் ஏறியது
இந்த நிலையில் நேற்று 20 காசுகள் பெட்ரோல் விலை உயர்ந்தது. இன்றும் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 24 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.74 காசுகளாக விற்கிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 78.61 காசுகளாக விற்கிறது.
மிக அதிகம்
மும்பையில் மீண்டும் பெட்ரோல் விலை 90 ரூபாய நெருங்கி வருகிறது. அங்கு பெட்ரோல் விலை 89.01 ரூபாயாக உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை 82.80 ரூபாயாக உள்ளது. இந்தியாவிலேயே மும்பையில்தான் பெட்ரோல் விலை அதிகம் விற்கிறது. தொடர்ந்து பெட்ரோல் விலை உயரும் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த விலை செஞ்சுரி வாய்ப்புள்ளது.