தமிழகத்தில் சுதந்திர தினம் கோலாகலம் - ஆட்சியர்கள் கொடியேற்றினர் - வீடியோ
71வது சுதந்திரதினம் இன்று தமிழகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றினர். கலைநிகழ்ச்சிகளுடன் விழா களைகட்டியது.
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றி வைத்தனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் 71ஆவது சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் முதல்வர் எடப்பாடி பானிசாமி கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.

அதேபோல் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் ஆட்சியர்கள் கொடியேற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினர். திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ் பழனிச்சாமி கொடியேற்றி வைத்து சமாதானப் புறாவை பறக்க விட்டார்.
சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
கரூரில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் கொடியேற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications