இரு வருடங்களில் 23% மின் உற்பத்தி அதிகரிப்பு.. பியூஷ் கோயல் பெருமிதம்
சென்னை: கடந்த இரண்டு வருங்களில் 23 சதவீதம் அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் இன்று தெரிவித்தார்.
சென்னை வந்துள்ள பியூஷ் கோயல் இன்று மாலை முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார்.

முன்னதாக சென்னை ஐஐடியில் நிருபர்களிடம் பியூஷ் கோயல் கூறுகையில், பாஜக அரசு மத்தியில் அமைந்த பிறகு, கடந்த கடந்த 2 வருடங்களில் 46 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் புதிதாக உற்பத்தி தொடங்கியுள்ளோம். கடந்த 2 வருடங்களில் மின் உற்பத்தி 23% அதிகரித்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாக மெத்தனமாக விடப்பட்டிருந்த மின் உற்பத்தி துறை, மோடி வழிகாட்டுதலுக்கு பிறகு உத்வேகம் அடைந்துள்ளது. நிலக்கரி ஊழலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதன் மூலம், தட்டுப்பாடு இன்றி, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நடக்கிறது, என்றார்.












Click it and Unblock the Notifications