ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது நாங்கள்தான்: கடலோர காவல்படை கமாண்டர் ராமாராவ் ஒப்புதல்
ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது கடலோர காவல்படைதான் என அதன் கமாண்டர் ராமா ராவ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது நாங்கள்தான் என கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் இந்தி அல்லது ஆங்கிலம் பேசவில்லை என்ற காரணத்தை கூறி கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்தோணி பிச்சை, ஜான்சன் என்கிற 2 ராமேஸ்வரம் மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

சுட்டது கடலோர காவல்படை இல்லை
ஆனால் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, மீனவர்களை சுட்ட குண்டு யாருடையது என தெரியாது என கூறியிருந்தார். தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் நிர்மலா சீதாராமன் சொல்வது சரியே என கூறியிருந்தார்.

சுட்டது கடலோர காவல்படையே
இந்நிலையில் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ் தங்கச்சிமடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது கடலோர காவல்படைதான். மீனவர்களால் மீட்கப்பட்ட 0.22 குண்டு கடலோர காவல்படைக்கு சொந்தமானதே.

காரணம் தெரியவில்லை
துப்பாக்கிச் சூடு நடத்திய அபாக்கா கப்பல் சென்னையைச் சேர்ந்தது. நடுக்கடலில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. விசைப்படகை மீனவர்கள் நிறுத்தாமல் சென்றதால் துரத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்திருக்கலாம்.

நிர்மலா கருத்து
இது தொடர்பாக சென்னையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரப்பர் குண்டு என கருத்தில் கொண்டு கடலோர காவல்படைக்குச் சொந்தமானது இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்திருக்கலாம்.
இவ்வாறு ராமாராவ் கூறினார்.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு!












Click it and Unblock the Notifications