நாடு முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது : யஷ்வந்த் சின்ஹா 'பொளேர்'
நாடு முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது என்று யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
வாரணாசி : இந்திரா காந்தி காலத்தில் இருந்த நெருக்கடி நிலையை விட நாடு தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை நகைச்சுவையாக்கி விட்டார்கள் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து சமீபத்தில் வெளியேறிய அக்கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வாரணாசியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியா தற்போது இந்திரா காந்தி காலத்தின் நெருக்கடி நிலையை விட மோசமான நிலையில் இருக்கிறது. நாடு முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது.
நாட்டின் ஜனநாயகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதைய ஆட்சியாளர்கள் அரசியலமைப்புச் சட்டத்தையையே நகைச்சுவை ஆக்கிவிட்டார்கள். அனைத்து அரசு அமைப்புகளும் தவறான வழிக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆட்சியாளர்களின் உத்தரவிற்கேற்ப எல்லாம் நடக்கிறது. அரசாங்கத்தின் உயர் பதவியில் இருப்பவர்களின் கட்டுப்பாட்டில் மொத்த அரசும் இயங்குகிறது. அமித் ஷா தலைவராக உள்ள கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற முறைகேடு குறித்து யார் விசாரணைக்கு உத்தரவிடுவார்கள்.
நீதித்துறையே நெருக்கடியில் இருக்கிறது என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!











Click it and Unblock the Notifications