எண்ணூரில் விபத்துக்குள்ளான கப்பல்கள் சிறைப்பிடிப்பு.. இந்திய கடலோர காவல்படை அதிரடி
எண்ணூரில் விபத்துக்குள்ளான கப்பல்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்திய கடலோர காவல்படை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை: எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டன. இதில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்திற்குள்ளான 2 கப்பல்களை இந்திய கடலோர காவல்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
கடந்த 28ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த 'டான் காஞ்சிபுரம்' கப்பல் மீது, குவைத் கப்பல் ஒன்று மோதியது. துறைமுகத்திற்கு 2 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த விபத்தால் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை கச்சா எண்ணெய் பரவி கடற்கரை பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் வாழ் உயிரினங்களான, மீன், ஆமை உள்ளிட்டவை செத்து மிதந்தன. கடலில் பரவி வரும் எண்ணெய்யை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேசிய மீனவர் நலச் சங்கம் சார்பில் பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 100 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும். விபத்திற்கு காரணமான கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கப்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்திய கடலோர காவல்படையினர் விபத்திற்குள்ளான 2 கப்பல்களையும் சிறைப்பிடித்துள்ளனர். இந்த 2 கப்பல்களும் எண்ணூர் துறைமுகத்திற்குட்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை 2 கப்பல்களும் விடுவிக்கப்படும்.
ஏற்கனவே, இந்த விபத்தை ஏற்படுத்திய எரிவாயு கப்பல் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2 கப்பல்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications