ஜெ. மரணத்தில் உள்ள உண்மை வெளிச்சத்திற்கு வரும்: மாஜி அமைச்சர் பொன்முடி வரவேற்பு

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிவரும் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிவரும் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகவுள்ள நிலையில் அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகாமலே உள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள் சசிகலா குடும்பத்தினர்தான் ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

Inquiry should be conducted neutrally : Former minister Ponmudi

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதற்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலில் நீதி விசாரணை கோரியது திமுகதான் என்றும் அவர் கூறினார்.

மேலும் விசாரணை உண்மையான முறையில் நடுநிலையோடு நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். விசாரணை கமிஷன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிச்சத்திற்கு வரும் என நம்புவதாகவும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+