ஜெயலலிதா, மமதா, சங்மா, கலாம்.. 2012 ஜனாதிபதி தேர்தலில் நடந்தேறிய விசித்திரங்கள்- ப்ளாஷ்பேக்!
சென்னை: 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் ஏகப்பட்ட விநோதங்களுடன் சுவாரசியமானதாக இருந்தது.
காங்கிரஸ் கட்சி நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியை அதிரடியாக வேட்பாளார் என அறிவித்தது. அப்போது அதிரடியாக ஜெயலலிதா, லோக்சபா முன்னாள் சபாநாயகர் சங்மாவை வேட்பாளராக முன்னிறுத்தினார். அவருக்கு பிஜூ ஜனதா தளம் முதலில் ஆதரவு தெரிவித்தது.

கலாமுக்கு வாய்ப்பு
அதேநேரத்தில் மமதா பானர்ஜி, பிரணாப் முகர்ஜியை ஏற்க முடியாது; அப்துல் கலாமையே வேட்பாளராக நிறுத்தலாம் என்றார். ஆனால் திமுகவோ காங்கிரஸின் பிரணாப்பையும் அதிமுகவோ சங்மாவையும்தான் ஆதரித்தன.

கலாமை கைவிட்ட தமிழக கட்சிகள்
தமிழகத்து அப்துல் கலாம் ஜனாதிபதியாவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தரவில்லை. இதனால் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டிடப் போவதில்லை என அறிவித்தார் கலாம்.

சோம்நாத் சட்டர்ஜி
மமதா பானர்ஜி ஒரு கட்டத்தில் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை வேட்பாளராக்கலாம் என கூறினார். இந்த சோம்நாத் சட்டர்ஜியை வீழ்த்திவிட்டுதான் 1984-ல் எம்.பியானவர் மமதா பானர்ஜி. இன்னொரு விசித்திரம் சோம்நாத் சட்டர்ஜியை அவர் 40 ஆண்டுகாலம் உழைத்த சிபிஎம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்தது.

சென்னை வந்த அத்வானி
அப்போது சென்னைக்கு நேரில் வந்து ஜெயலலிதாவிடம் தாங்கள் முன்நிறுத்த போகும் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டார் அத்வானி. ஆனால் ஜெயலலிதாவோ சங்மாவையே பாஜக ஆதரிக்க வேண்டும் என அத்வானியிடம் வலியுறுத்தினார்.

சங்மாவை ஆதரித்த பாஜக
கடைசிவரையில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக சிவசேனாவும் ஐக்கிய ஜனதா தளமும் அறிவித்தன. இதனால் பாஜக, ஜெயலலிதா முன்னிறுத்திய சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்தது. அதேபோல் முரண்டுபிடித்த மமதா பானர்ஜி கடைசியில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளித்தார்.

வென்ற பிரணாப்
காங்கிரஸின் பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி பெற்று நாட்டின் 13-வது ஜனாதிபதியானார். அப்துல் கலாம் 2015-ல் காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் சங்மாவும், டிசம்பரில் ஜெயலலிதாவும் காலமாகினர்.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப்












Click it and Unblock the Notifications