அன்று அப்பா... இன்று மகன்... சாதித்து காட்டிய வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பரமசிவம்
திண்டுக்கல்: வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றுள்ள டாக்டர் வி.பி.பி. பரமசிவம் தமது தந்தை முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. பாலசுப்பிரமணியம் போலவே சாதித்துள்ளார்.
வேடசந்தூர் தொகுதியில் 1980-ம் ஆண்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர் வி.பி. பாலசுப்பிரமணியன். இவர் தற்போது அதிமுக வேட்பாளராக களத்தில் நின்று வென்ற டாக்டர் வி.பி.பி. பரமசிவத்தின் தந்தை.

அந்த தேர்தலில் வி.பி. பாலசுப்பிரமணியனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜி.பி.வி. ராஜ் களமிறங்கினார். அதில் வி.பி. பாலசுப்பிரமணியன் வெற்றி பெற்றார்.
தற்போதைய தேர்தலில் வி.பி. பாலசுப்பிரமணியன் மகன் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சிவசக்திவேல் கவுண்டர் களத்தில் நின்றார்.

இதில் சுவராசியம் என்னவெனில் 1980-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்ற 1980-ம் ஆண்டு மே 28-ந் தேதியன்று பிறந்தவர்தான் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம்,. இந்த தேர்தலில் தந்தையைப் போல மகனும் காங்கிரஸ் வேட்பாளர் சக்திவேல் கவுண்டரை 19,600 வாக்குகளில் வீழ்த்தி சாதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications