For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் ரூ.35 லட்சம் கொள்ளை: துப்பு கிடைத்துவிட்டதாக கமிஷனர் பேட்டி

விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை ஐஓபி வங்கியில் ரூ.32 லட்சம் கொள்ளை- வீடியோ

    சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள ஐஓபி வங்கியில் லாக்கரை உடைத்த மர்மநபர்கள் அங்கிருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    சென்னை விருகம்பாக்கத்தில் ஆற்காடு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இங்கு இன்று ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது வங்கியின் சுவரில் துளையிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் வங்கியில் இருந்த 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 35 லட்சமாகும்.

    சிசிடிவி காட்சிகள்

    சிசிடிவி காட்சிகள்

    இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    பதற்றம்

    பதற்றம்

    கொள்ளையடிக்கப்பட்ட வங்கி முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்டவற்றில் தங்களுடைய பணம், நகை இருக்குமோ என்று வாடிக்கையாளர்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.

    தகவல்கள் கசிந்தன

    தகவல்கள் கசிந்தன

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் போலீஸார் விசாரணை நடைபெற்று வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கி கொள்ளையில் கடந்த 4 ஆண்டுகளாக ஹவுஸ் கீப்பிங் பணியில் இருந்தவர்தான் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

    கமிஷனர் ஆய்வு

    கமிஷனர் ஆய்வு

    கொள்ளையர்கள் கேஸ் சிலிண்டர் கட்டர் வைத்து வெல்டிங் செய்துவிட்டு முதல் தளத்திலிருந்து இருந்து லாக்கர் அறைகள் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கியில் சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆய்வு நடத்தினார்.

    கணக்கெடுப்பு பணிகள்

    கணக்கெடுப்பு பணிகள்

    தற்போது வரை 130 பைகளில் வைக்கப்பட்ட 106 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காவல் துறை விஸ்வநாதன் கூறுகையில், வங்கியில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிட்டு கொள்ளை நடந்துள்ளது.

    துப்பு கிடைத்துள்ளது

    துப்பு கிடைத்துள்ளது

    2 லாக்கர்கள் மட்டுமே உடைக்கப்பட்டுள்ளது. மற்றவை பாதுகாப்பாக உள்ளது என்பது முதல் கட்டமாக தெரிந்துள்ளது. குற்றவாளி பற்றி துப்பு கிடைத்துள்ளது. எனவே கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.

    English summary
    IOB bank robbery in Chennai Virugambakkam. Rs. 32 lakhs robbed by drilling hole in bank walls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X