சென்னையில் பொதுவெளியில் ஐபிஎல் வீரர்கள் மீது தாக்குதல் நடந்தால் நாங்கள் பொறுப்பு அல்ல- வேல்முருகன்
சென்னையில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு வேல்முருகன் போராட்டம் நடத்தினார்.
Recommended Video

சென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டு வேல்முருகன் போராட்டம் நடத்தினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நாளை நடத்தப்படுகின்றன.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போட்டிகளை பார்க்க சென்னையில் யாரும் போகாமல் இருந்து மைதானமே காலியாக இருப்பதன் மூலம் நம் பிரச்சினைகளை டிவியில் பார்க்கும் உலக நாடுகளுக்கு உணர்த்துவோம் என்று அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் கூறி வந்தனர்.

இடம்
ஐபிஎல் போட்டிகளை கிரிக்கெட் வாரியம் இடம் மாற்ற செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன. ஆனால் திட்டமிட்டபடி நாளை சென்னையில் போட்டிகள் நடைபெறும் என்று தமிழக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஐபிஎல் என்பது சூதாட்டம்
அப்போது அவர் கூறுகையில் ஐபிஎல் என்பது ஒரு சூதாட்டம். அதை சென்னையில் நடத்த அனுமதிக்கக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஐபிஎல் கூடாது. நெல்லையில் நாளை என்எல்சியை முற்றுகையிடவுள்ளோம்.

பழ. நெடுமாறன் தொடக்கம்
அந்த என்.எல்.சி. முற்றுகைப் போரை பழ. நெடுமாறன் தொடங்கி வைக்கிறார். ஐபிஎல் போட்டியை நிறுத்தவும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம். சென்னையில் நடமாடும் ஐபிஎல் வீரர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல.

போட்டி வேண்டாம்
தமிழகத்தின் உணர்வை கிரிக்கெட் வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மீறி நடத்தினால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடத்தில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எங்கள் எதிர்ப்பை காட்டுவோம். நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தால் ரசிகர்கள்போல் சென்று தொண்டர்கள் எதிர்ப்பர்.

முதுகெலும்பில்லாதவர்கள்
ஈழ போரின்போது தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். அப்போது கபடி விளையாட்டு வீரர்கள் இலங்கையில் விளையாட இருந்தனர். இதையடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தமிழக வீரர்கள் இலங்கை செல்ல கூடாது என்று வலியுறுத்தினேன். என் கோரிக்கையை உடனே ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அடுத்த விமானத்திலேயே இலங்கை சென்ற வீரர்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தார். அண்ணா, காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் அமர்ந்திருந்த அரியணையில் இன்று சூதாட்டத்தை கூட நிறுத்த முதுகெலும்பில்லாதவர்கள் அமர்ந்துள்ளனர் என்றார் வேல்முருகன்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
ரூ.15,300 கோடி.. ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர்.. பின்னணியில் வால்மார்ட்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications