சென்னையில் பொதுவெளியில் ஐபிஎல் வீரர்கள் மீது தாக்குதல் நடந்தால் நாங்கள் பொறுப்பு அல்ல- வேல்முருகன்
சென்னையில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு வேல்முருகன் போராட்டம் நடத்தினார்.
Recommended Video

சென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டு வேல்முருகன் போராட்டம் நடத்தினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நாளை நடத்தப்படுகின்றன.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போட்டிகளை பார்க்க சென்னையில் யாரும் போகாமல் இருந்து மைதானமே காலியாக இருப்பதன் மூலம் நம் பிரச்சினைகளை டிவியில் பார்க்கும் உலக நாடுகளுக்கு உணர்த்துவோம் என்று அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் கூறி வந்தனர்.

இடம்
ஐபிஎல் போட்டிகளை கிரிக்கெட் வாரியம் இடம் மாற்ற செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன. ஆனால் திட்டமிட்டபடி நாளை சென்னையில் போட்டிகள் நடைபெறும் என்று தமிழக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஐபிஎல் என்பது சூதாட்டம்
அப்போது அவர் கூறுகையில் ஐபிஎல் என்பது ஒரு சூதாட்டம். அதை சென்னையில் நடத்த அனுமதிக்கக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஐபிஎல் கூடாது. நெல்லையில் நாளை என்எல்சியை முற்றுகையிடவுள்ளோம்.

பழ. நெடுமாறன் தொடக்கம்
அந்த என்.எல்.சி. முற்றுகைப் போரை பழ. நெடுமாறன் தொடங்கி வைக்கிறார். ஐபிஎல் போட்டியை நிறுத்தவும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம். சென்னையில் நடமாடும் ஐபிஎல் வீரர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல.

போட்டி வேண்டாம்
தமிழகத்தின் உணர்வை கிரிக்கெட் வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மீறி நடத்தினால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடத்தில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எங்கள் எதிர்ப்பை காட்டுவோம். நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தால் ரசிகர்கள்போல் சென்று தொண்டர்கள் எதிர்ப்பர்.

முதுகெலும்பில்லாதவர்கள்
ஈழ போரின்போது தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். அப்போது கபடி விளையாட்டு வீரர்கள் இலங்கையில் விளையாட இருந்தனர். இதையடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தமிழக வீரர்கள் இலங்கை செல்ல கூடாது என்று வலியுறுத்தினேன். என் கோரிக்கையை உடனே ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அடுத்த விமானத்திலேயே இலங்கை சென்ற வீரர்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தார். அண்ணா, காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் அமர்ந்திருந்த அரியணையில் இன்று சூதாட்டத்தை கூட நிறுத்த முதுகெலும்பில்லாதவர்கள் அமர்ந்துள்ளனர் என்றார் வேல்முருகன்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க












Click it and Unblock the Notifications