தீவிரவாதி அபுபக்கர் திருப்பூரில் பதுங்கல்?… பறவை பாஷா எங்கே? போலீஸ் தேடுதல் வேட்டை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தேடப்பட்டு வரும் தீவிரவாதியான அபு பக்கர் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

நாகூரைச் சேர்ந்த அபு பக்கர் சித்திக் கடந்த 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கிறார்.

1995 ஆம் ஆண்டு நாகூரில் இந்து முன்னணி பிரமுகர் தங்க முத்து கிருஷ்ணனை கொலை செய்ய புத்தக பார்சல் அனுப்பியது, மயிலாடுதுறையில் இந்து அமைப்பைச் சேர்ந்த ஜெகவீர பாண்டியன் என்பவரை கொலை செய்ய புத்தக பார்சல் அனுப்பியது மற்றும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வீசிய வழக்குகளில் தொடர்புடையவர்.

மேலும் பாரதிய ஜனதா மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலை வழக்கிலும் அபு பக்கர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தை கடந்த 3 மாதங்களாக கலக்கி வந்த பயங்கர தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர் தமிழக போலீசார். இவர்களுக்கு எல்லாம் தலைமை தாங்கி, தளபதியாக செயல்பட்ட சர்வதேச தீவிரவாதி அபுபக்கர் சித்திக் என்பது தெரியவந்துள்ளது. பிடிபட்ட தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையின்போது தமிழகத்தை சீர்குலைக்க அவருடன் இணைந்து தீட்டிய சதித்திட்டம் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.

போலீஸ் பக்ருதின் மற்றும் அவரது கூட்டாளிகள் பிடிபட்ட நிலையில் அபு பக்கர் திருப்பூரில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதேசமயம் மற்றொரு தேடப்படும் குற்றவாளியான பறவை பாஷாவை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+