இவரு மாஃபா பாண்டியராஜனா இல்ல ‘மாஃகா‘ பாண்டியராஜனா?
சென்னை வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அமைச்சர் மாஃபா பாண்டியரஜனின் பெயர் மாஃகா என அச்சிடப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவில் முன்பாக வைக்கப்பட்டுள்ள பேனரில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் பெயர் மாஃகா பாண்டியராஜன் என அச்சிடப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் மட்டுமின்றி அதிமுக தொண்டர்களும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அண்மையில் சிறப்பு பூஜை நடத்ப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்குபெறுவார் என அறிவிக்கப்பட்டு விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.

மதுராவாயில் பகுதி அதிமுக வினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மாஃகா.பாண்டியராஜன் என பெயர் அச்சிடப்பட்டிருந்தது.
அமைச்சரின் பெயர் கூட தெரியாமல் வைக்கப்பட்டிருந்த இந்த பேனரால் அவர் மாஃபா பாண்டியராஜனா அல்லது மாஃகா பாண்டியராஜனா என்ற குழப்பம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications