ஜெ.வுக்கு தண்டனை வாங்கித்தராம ஓயமாட்டேன்னு சொன்னவர் தானே எஸ்.ஆர்.பி.: ராமதாஸ்
சென்னை: எஸ்.ஆர்.பி அதிமுகவில் இணைந்தார்: யாரு... சி.பி.ஐ. அமைச்சராக இருந்த போது ஜெ.வுக்கு தண்டனை வாங்கித் தராம ஓயமாட்டேன்னு சொன்னாரே அவரா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழக நடப்பு மற்றும் நாட்டு நடப்பு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவ்வப்போது ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் தமிழ் மாநில காங்கிரஸை சேர்ந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் அதிமுகவில் இணைந்தது பற்றியும் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
எஸ்.ஆர்.பி.
எஸ்.ஆர்.பி அதிமுகவில் இணைந்தார்: யாரு... சி.பி.ஐ. அமைச்சராக இருந்த போது ஜெ.வுக்கு தண்டனை வாங்கித் தராம ஓயமாட்டேன்னு சொன்னாரே அவரா?
|
பா.ம.க.
ஆட்சியை அகற்ற எங்களுக்கு சக்தி கொடுங்கள்: கலைஞர் - அதை பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்கள் கொடுத்து பல மாதங்களாகிவிட்டது!
|
தயாநிதி மாறன்
தயாநிதி மாறனை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவதும், பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பதும் ஒன்று தான்!
|
கருணாநிதி
ஆட்சி மாற்றத்தை தாருங்கள், ஏமாற்றத்தை தராதீர்கள்: கலைஞர் - கவலையே படாதீங்க. மாற்றம் எங்களுக்கு, ஏமாற்றம் உங்களுக்கு, முன்னேற்றம் மக்களுக்கு!












Click it and Unblock the Notifications