கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி - விஞ்ஞானிகள் தகவல்
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டிற்கான கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
நெல்லை: ஜி.எஸ்.எல்.வி மார்க் ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை ஓட்டம் மகேந்திர கிரியில் வெற்றிகரமாக நடைபெற்றது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதில அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஏற்கனவே வெற்றியடைந்துள்ளன. நான்காவது நாடாக இந்தியாவும் அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதற்காக, ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட்டின் தொடர் சோதனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இஸ்ரோவின் மகேந்திரகிரி திரவ என்ஜின் ஆய்வு மையத்தில் கிரையோஜெனிக் என்ஜினின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் இதை நேரில் பார்வையிட்டார்.
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டிற்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை ஓட்டம் 25 வினாடிகள் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.