சென்னை ஐடி அலுவலகத்தில் நாளை ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆகியோருக்கு சம்மன்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகுமாறு தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்
சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் இடைதேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று முந்தைய தினம் தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைபபற்றப்பட்டதாகவும் தெரிகிறது.
இதுதொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித் துறையினர் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் மேற்கண்ட மூவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அச்சமயம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படலாம் என்று அதுகுறித்து விளக்கம் கேட்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரி ஏய்ப்பு, தேர்தல் விதிமுறை மீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications