ஓ.பி.எஸ் , எடப்பாடியிடமும் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
சென்னை: சசிகலாவிற்கும், ஜெயலலித்தாவிற்கும் பணம் வசூல் செய்து கொடுத்தது ஒ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடிபழனிச்சாமி ஆகியோர்தான் என்றும் அவர்களை வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
முதலில் கமலஹாசன் அரசியலுக்கு வரட்டும் அதன் பின்னர் அவர் குறித்து பேசலாம். சசிகலாவிற்கும், ஜெயலலித்தாவிற்கும் பணம் வசூல் செய்து கொடுத்தது ஒ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்தான். இவர்களையும் வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அன்றாட நிர்வாகம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்துவது ஜனநாயக மரபு இல்லை.
தமிழக முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் பிரதமர் மோடியின் அடிமைகளாக இருக்கின்றனர். ஆளுநர் நடவடிக்கை தொடர்பாக சூழ்நிலை ஏற்பட்டால் அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து ஜனாதிபதியை சந்தித்து முறையிடலாம். இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.