பெண் வருமான வரித்துறை அதிகாரிக்கு மிரட்டல்.. அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மீது புகார்
வருமான வரித்துறை பெண் அதிகாரியை மிரட்டியதாக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மீது வருமான வரித்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின் போது பெண் அதிகாரி மிரட்டப்பட்ட புகாரின் பேரில் அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க அம்மா அணி சார்பில் பணப்பட்டுவாடா நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த 7ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டின்போது ரூ.89 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்பட பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியது வருமான வரித்துறை.

இதுதெடார்பான விசாரணைக்கு ஆஜரான விஜயபாஸ்கர், மூன்று நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில் வருமான வரித்துறை புலனாய்வுத் துறை இயக்குநர் தமிழக காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்
விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்த போது, அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆதாரங்களை அழித்தல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications